விஜய் குறித்து திரிஷா பதிவிட்ட மறைமுக மெசேஜ் – உண்மை என்ன
தமிழ் சினிமாவின் பிரபல ஜோடியாக விளங்கும் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமீப காலமாக பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதன் நடுவில், நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சில மறைமுக பதிவுகள் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
சமீபத்தில் சென்னை நகரில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜயுடன் திரிஷா கலந்து கொண்டது பெரும் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து, இவர்களுக்கிடையேயான உறவைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கின.
இதற்கிடையில், திரிஷா பகிர்ந்த ஒரு வீடியோவில், "வாழ்க்கையில் நான் இனி வாதிட மாட்டேன். யாராவது யானை பறக்க முடியும் என்றாலும் சரி, அது சரி என்று சொல்லிவிடுவேன். நான் ஒத்துக்கொள்வதால் அல்ல, எனக்கு அது முக்கியமில்லை என்பதால்" என்ற கருத்து இடம்பெற்றது.
அதே பதிவில், “சமாதானம் தான் முக்கியம், சரி என்று நிரூபிப்பதை விட. அமைதியாக இருப்பது விளக்குவதைக் காட்டிலும் எளிது. எல்லோருக்கும் உங்கள் ஆற்றலை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறப்பட்டிருந்தது.
இதன் மூலம், சமூக வலைதளங்களில் பரவும் விமர்சனங்களுக்கு திரிஷா மறைமுகமாக பதிலளித்திருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
மேலும், "அன்பு எல்லாமே அல்ல... ஆனால் அன்பில்லாமல் எதுவும் அர்த்தமில்லை" என்ற மற்றொரு பதிவுக்கும் திரிஷா "Fact" என்று பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடித்த ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘ஆதி’, ‘குருவி’ போன்ற படங்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ‘லியோ’ திரைப்படத்தில் மீண்டும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவர்களை பற்றிய வதந்திகள் அதிகரித்தாலும், இதுவரை விஜயோ அல்லது திரிஷாவோ எந்தவொரு அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கவில்லை.
இதனால், உண்மை என்ன என்பது குறித்து ரசிகர்களிடையே இன்னும் கேள்விகள் நிலவி வருகின்றன.
.jpg)
கருத்துகள்
கருத்துரையிடுக